ஆற்றில் ஜீப், டிராக்டர் கவிழ்ந்து விபத்து: உ.பி.யில் 14 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
வாரணாசி அருகேயுள்ள தரியாகஞ்ச் கிராமத்தை சேர்ந்த பேனிபிரசாத் யாதவ் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை தகனம் செய்து விட்டு வாரணாசியில் இருந்து ஒரு ஜீப்பில் 14 பேர் திரும்பி கொண்டிருந்தனர்.
வாரணாசி-ஜான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாய் ஆற்றின் பாலத்தில் வந்த போது ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. அதில் 11 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிராக்டர் கவிழ்ந்து விபத்து
இதே போன்று பக்ரியா என்ற இடத்தில் மேலும் ஒரு விபத்து நடந்தது. டிராக்டர் கங்கை ஆற்றில் கவிழ்ந்ததை தொடர்ந்து அதில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.












Click it and Unblock the Notifications