ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு மீது ராஜ்நாத்சிங் புகார்
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் நேற்று பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதத்தை எதிர்த்துப் காங்கிரசால் போராட முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது.
பயங்கர வாதத்தை தடுக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் இது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
ஈழத் தமிழர் பிரச்சனை, வடகிழக்கு மாநில ஊடுருவல்கள் போன்ற பல பிரச்சனைகள் இன்று நமது நாட்டை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் மத்திய அரசு இதுபோன்ற விவகாரங்களில் மெளனமாக இருக்கிறது. தெளிவான நிலையை விளக்கவில்லை என்றார் அவர்












Click it and Unblock the Notifications