ஜெர்மன் பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஓட்டல் தொழிலாளி
Subscribe to Oneindia Tamil
தேக்கடி: தேக்கடிக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் பயணி ஆவணங்களுடன் தவறவிட்ட ரூ50 ஆயிரத்தை நேர்மையான ஓட்டல் தொழிலாளி சுகுமார் போலீசில் ஒப்படைத்தார்.
தேக்கடி தனியார் ஓட்டலில் வேலை பார்க்கும் சுகுமார், இவர் குமுளி காந்தி நகர் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் குமுளி ஆனவச்சால் பகுதி வழியாக வரும்போது கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதில் வெளிநாடு சுற்றுலா செல்லும் ஆவணங்களும் ரூ50 ஆயிரமும் இருப்பது தெரிந்தது.
இதை எடுத்த சுகுமார் அந்த பையை குமுளி போலீசில் ஒப்படைத்தார்.
பையில் இருந்த தொலை பேசி எண் மூலம் போலீசார் ஜெர்மன் நாட்டு பயணி என்ரிக்கோவுக்கு தகவல் தெரிவித்தனர். குமுளி வந்த அவர் சுற்றுலா வந்தபோது பையை தவற விட்டதாக தெரிவித்தார். பின்னர் அவரது பையை ஓட்டல் தொழிலாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications