8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

8 hour power cut irks +2 students
சென்னை: தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் மீண்டும் 8 மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் பொதுத் தேர்வுக்கு படித்து வரும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் 6 முதல் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. மேலும் வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவியர் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருப்பதில்லை. அதேபோல் அதிகாலை 5 மணிக்கே மின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் பல மாணவ-மாணவியர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகள் முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்கக் கூடாதா என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+