8 மணிநேரம் பவர்கட் பண்ணா எப்படி படிக்கிறதாம்? குமுறும் பிளஸ் 2 மாணவர்கள்

தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மீண்டும் 6 முதல் 8 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. மேலும் வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவியர் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் படிக்க முடியாமல் திணறுகின்றனர்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் இருப்பதில்லை. அதேபோல் அதிகாலை 5 மணிக்கே மின்வெட்டு ஏற்படுகிறது. இப்படி தேர்வுக்கு படிக்கும் நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவதால் மாணவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இதனால் பல மாணவ-மாணவியர் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகள் முடியும் வரையாவது தடையில்லா மின்சாரம் வழங்கக் கூடாதா என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications