கணவரை விட்டுப் பிரிந்து வாழும் 48 வயதுப் பெண்ணை கற்பழித்த 30 வயது நபர்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைளுடன் வசித்து வரும் 48 வயதுப் பெண்ணை, 30 வயதேயான நபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் குடிக்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி பெயர் ரஞ்சிதம். 48 வயதான இவர் தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இவர் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற 30 வயது வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். வீட்டுக் கதவை உள்பக்கமாக பூட்டி விட்ட அவர் ரஞ்சிதத்தை பலாத்காரம் செய்து விட்டாராம். பிறகு தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து ரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications