ஆ.ராசாவின் கோரிக்கையை ஜேபிசி நிராகரிக்கிறது...!
டெல்லி: ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தம்மை சாட்சியாக விசாரிக்கும்படி முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா விடுத்த கோரிக்கையை பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி) நிராகரிக்கும் என்று அதன் தலைவர் பி.சி. சாக்கோ மறைமுகமாத் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கை விசாரிக்கும் ஜேபிசி குழு தம்மை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என, ஆ.ராசா சபாநாயகர் மீரா குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார். தமது இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஆ.ராசா மிரட்டியிருந்தார்.
இது பற்றி ஜேபிசி தலைவர் பி.சி. சாக்கோ கூறுகையில், ஜேபிசி முன் ஆஜராவதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என்று எந்த விதிமுறையும் குறிப்பிடவில்லை. ஒருவரை அழைப்பதா? அதனால் பயனுள்ளதா என்பதை ஜே.பி.சி.தான் முடிவு செய்யும். இதுவரை ஆ.ராசாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அவரின் கடிதம் கிடைத்தது. அனைத்து பிரதான சாட்சிகள் குறித்தும் விசாரித்தாகி விட்டது. இது அறிக்கை தயாரிப்பதற்கான நேரம் என்ற கருத்து ஜே.பி.சி. உறுப்பினர்களிடம் உள்ளது. ஒரு சிலர் ஆ.ராசாவுக்கு அழைப்பு விடுப்பதில் என்ன தவறு என நினைக்கின்றனர். இருப்பினும் இது குறித்து மற்ற உறுப்பினர்களுடன் கலந்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அப்படியெனில் ஆ. ராசாவை கூப்பிடமாட்டீங்க?