விவசாயக் கடன் தள்ளுபடியில் ரூ. 10,000 கோடி ஊழல்: சிபிஐ விசாரிக்க வேண்டும்-பாஜக
டெல்லி: மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ. 10,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில்,
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி இருக்கிறது.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்து இருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ரூ.52,000 கோடி கடன் தள்ளுபடியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்து இருக்கிறது. தகுதியுடைய 34 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் தகுதியற்ற 24 லட்சம் பேர் கடன் தள்ளுபடி சலுகை பெற்று பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, ஒருசார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன் பெற்ற விவசாயிகள் ஒருமுறை தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டபோதிலும், உண்மையான, தகுதியுள்ள விவசாயிகள் பலர் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக தொகையும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவான தொகையும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதுபோன்று பாரபட்சமாக செயல்படுவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உண்மையான முகமாகும்.
இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்; தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் ஊழல் நடந்து இருப்பது இப்போது தெரிய வந்து உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆதாயத்துக்காக அரசாங்க பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications