விவசாயக் கடன் தள்ளுபடியில் ரூ. 10,000 கோடி ஊழல்: சிபிஐ விசாரிக்க வேண்டும்-பாஜக
டெல்லி: மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ. 10,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தத் திட்டத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில்,
காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி இருக்கிறது.
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும் அளவில் முறைகேடு நடந்து இருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ரூ.52,000 கோடி கடன் தள்ளுபடியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்து இருக்கிறது. தகுதியுடைய 34 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் தகுதியற்ற 24 லட்சம் பேர் கடன் தள்ளுபடி சலுகை பெற்று பெரிய அளவில் ஆதாயம் அடைந்துள்ளனர்.
இத்திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, ஒருசார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன் பெற்ற விவசாயிகள் ஒருமுறை தவணைத் தொகையை செலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடி வழங்க முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதனால்தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டபோதிலும், உண்மையான, தகுதியுள்ள விவசாயிகள் பலர் கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக தொகையும், பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவான தொகையும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. இதுபோன்று பாரபட்சமாக செயல்படுவதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உண்மையான முகமாகும்.
இந்த ஊழலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார் ஜஸ்வந்த் சிங்
பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்; தேர்தல் ஆதாயத்தை கருத்தில் கொண்டு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதில் ஊழல் நடந்து இருப்பது இப்போது தெரிய வந்து உள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆதாயத்துக்காக அரசாங்க பணம் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications