Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருக்கடி தரும் திமுக- ஆ.ராசா.. குழப்பத்தில் காங்கிரஸ்: ஜேபிசியின் புது ரூட்டு!

Subscribe to Oneindia Tamil

Raja
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு (ஜேபிசி) முன் ஆஜராகி விளக்கமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவரை நேரடியாக ஆஜராக விடாமல், அவர் சொல்ல விரும்பும் விஷயத்தை எழுத்துப்பூர்வமாக மட்டும் தரலாம் என்று உத்தரவிட திட்டமிட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

2ஜி விவகாரத்தில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி ஜேபிசியிடம் அளித்த வாக்குமூலம் மூலமாக தவறு அனைத்தும் ராசா மீது மட்டுமே என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை உடைக்க ராசாவும் திமுக தலைமையும் விரும்புகின்றன. இதனால் இது தொடர்பாக ஜேபிசி முன் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று ராசா கோரி வருகிறார். அவர் ஆஜரானால், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் பெயரையும் இழுத்துவிட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் கருதுகிறது.

இதனால், அவரை ஆஜராக விட காங்கிரஸ் தரப்பு தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. இந் நிலையில், இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டு தான், டெசோ மூலமாக இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு நமக்கு திமுக குடைச்சல் கொடுக்கிறதோ என்ற சந்தேகமும் காங்கிரசிடம் உள்ளது.

இதனால், 2ஜி விவகாரத்தில் திமுக-ராசாவின் கோரிக்கைக்கு பணிய வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது.

இந் நிலையில், ராசாவை நேரில் ஆஜராக விட்டால் அவரிடம் ஜேபிசியில் உள்ள பாஜக, இடதுசாரி எம்பிக்கள் ஏடாகூடமாக கேள்விகளைக் கேட்டு, அதற்கு ராசாவும் ஏடாகூடாமாக ஏதாவது சொல்லி வைத்துவிட்டால், நிலைமை மோசமாகுமே என்றும் காங்கிரஸ் அஞ்சுகிறது.

இதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பதை எழுத்துப்பூர்வமாக தரவும் என்று ஜேபிசி தலைவரான காங்கிரஸைச் சேர்ந்த பி.சி.சாக்கோ மூலம் ராசாவுக்கு தகவல் தரப்படலாம் என்று தெரிகிறது. அதில், வாகானவதியின் குற்றச்சாட்டுகளுக்கு உங்களது பதில்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கவும் என்று கூறப்படலாம் என்கிறார்கள்.

தன்னை ஜேபிசி முன் ஆஜராக விடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று ராசா மிரட்டி வருவதும், திமுக தலைமையின் அனுமதியில்லாமல் ராசா இவ்வாறு கூறியிருக்க வாய்ப்புக்கள் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராசாவை ஏன் விசாரணைக்கு அழைக்க மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராசாவுக்கு சட்டரீதியாக பாதுகாப்பு உள்ளது. இதனால் அவர் யார் முன்பும் ஆஜராகி பேசுவதோ, புதிய குற்றச்சாட்டுகளை சொல்வதோ சட்டப்படி செல்லாது. இதனால் அவரை விசாரணைக்கு அழைப்பதால் பயனில்லை என்கிறாராம் சாக்கோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+