சூரியநெல்லி சிறுமியின் குடும்பத்துக்கு அனுமதி மறுத்ததா தேவாலயம்?
கோட்டயம்: சூரியநெல்லி பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் அப்பகுதி தேவாலயம் உள்ளே செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேவாலய நிர்வாகம் இதனை நிராகரித்திருக்கிறது.
கேரள மாநிலம் சூரியநெல்லியில் 1996ம் ஆண்டு அப்போது 16 வயது சிறுமியாக இருந்தவரை 45 நாட்கள் சிறை வைத்து 42 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அண்மையில் விஸ்வரூபமெடுத்தது. ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே. குரியனின் தலையும் இதில் உருண்டது.
மேலும் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இடுக்கி மாவட்டம் சூரிய நெல்லியைவிட்டு வெளியேறி கோட்டயம் மாவட்டம் குறிச்சி பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், குறிச்சி பகுதியில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தின் நிர்வாகி, தங்களை அழைத்து பிரார்த்தனைகளுக்கு வருவதை தவிர்த்துவிடலாம் என்று நட்பு ரீதியாகக் கூறினர். இது எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தேவாலய நிர்வாகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் அந்த சிறுமியும் அவரது குடும்பத்தினரும் எப்போது வேண்டுமானாலும் வந்து பிரார்த்தனை நடத்தலாம் என்றும் தேவாலய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications