கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பழனிச்சாமியின் மகன், உறவினர்கள் கைது
மதுரை: கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பழனிச்சாமியின் மகன் சுரேஷ் குமார் உள்ளிட்ட 9 பேர், மேலும் ஒரு புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறி பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமி உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கீழையூர் கிராம நிர்வாக அதிகாரி அக்பர்சேட் கீழவளவு போலீசாரிடம் 2 புகார்களை கொடுத்தார். முதல் புகாரில் கீழையூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் 99-ல் 3 ஏக்கர் 37 செண்டு அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அரசு விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டு இருந்தது.
மற்றொரு புகாரில் சர்வே எண் 626-ல் 9 ஏக்கர் 37 செண்டு அரசு நிலத்தை இதேபோல முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார்கள் தொடர்பாக பி.ஆர்.பி. நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி, மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், செந்தில்குமாரின் மனைவி சந்திரலேகா, பி.ஆர்.பழனிச்சாமியின் மகள் சிவரஞ்சனி, அக்காள் மகன் முருகேசன், கல்லம்பட்டியை சேர்ந்த கோட்டை வீரன் மற்றும் கம்பெனி நிர்வாகிகள் மீது இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து பி.ஆர்.பழனிச்சாமியின் மகன் சுரேஷ்குமார், உறவினர்கள் தெய்வேந்திரன், ஆறுமுகம், அய்யப்பன், எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் அனுமந்தன், சத்தியராஜ், ஆறுமுகம், ஜோதிபாசு, பரமானந்தம் ஆகிய 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications