அமெரிக்காவில் சொந்த வீட்டில் சத்தம்போட்டு சிரித்தவருக்கு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் தன் வீட்டில் சத்தம்போட்டு சிரித்த ஒருவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. அல்லது அவர் ரூ. 27,237 அபராதம் செலுத்தவிட்டு சிறை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நியூயார்க்கில் உள்ள ராக்வில் சென்டரைச் சேர்ந்தவர் ராபர்ட் ஷியாவெல்லி(42). நரம்பு பிரச்சனைகளால் அவதிப்படும் ராபர்ட் அவரது வீட்டில் சத்தம்போட்டு சிரிப்பது தங்களுக்கு இடையூறாக உள்ளதாக அவரது பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். கடந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி அளவில் ராபர்ட் சத்தம் போட்டு சிரித்து பக்கத்து வீட்டுக்காரரின் நிம்மதியைக் கெடுத்துவிட்டாராம். அவர் சிரிப்பது தெருவுக்கே கேட்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 30 நாட்கள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அவர் ரூ.27,237 அபராதம் கட்ட வேண்டும். என் வீட்டில் சிரிப்பது கூட ஒரு குற்றம் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார் ராபர்ட்.
தனக்கு இருக்கும் குறைபாடுகளைப் பற்றி பக்கத்துவீட்டுக்காரர் ஏளனமாகப் பேசுகையில், சிரித்துவிட்டு தான் போக முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications