ஐநா தந்த 'அன்ஸ்பீக்கபிள் ட்ரூத்' அடிப்படையில் தீர்மானத்தில் திருத்தம் செய்த அமெரிக்கா!!

அதன்படி போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா திருத்தம் செய்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்துவிட்டது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையமே இலங்கை மீது கடுமையான குற்றம்சாட்டி 38 பக்கங்களை கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'அன்ஸ்பீக்கபில் ட்ரூத்' என்ற தலைப்பில் பல உண்மைகளை அமெரிக்காவிடம் கொடுத்துள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னரும், ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பெண்கள், சிறுமிகள் மத்தியில் பாலியல் பலாத்காரம் அச்சம் நிலவுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வெறுமனே நீதி விசாரணை என்று சொல்லாமல், இலங்கையின் போர் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் மாற்றம் செய்ய பரிந்துரைத்தது மனித உரிமை அமைப்பு.
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐ.நா.வின் இந்த பரிந்துரையை அமெரிக்கா தமது தீர்மானத்தில் இணைத்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் போர் நிவாரண நடவடிக்கைகள் 99% நடந்து முடிந்துள்ளதாக இலங்கை அரசு ஐ.நா.வில் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications