யுவராஜா சஸ்பென்ட் விவகாரம்...தனிக் கட்சியா?: ஜி.கே.வாசன் பதில்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை, சமஅந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மறுகுடியமர்த்தல், மறுவாழ்வு பணிக்காக மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதே நிலையில் மத்திய அரசு தொடர்ந்து இருக்கும். தமிழர்கள் உணர்வுகளை மத்திய அரசு உணர்ந்து தக்க நேரத்தில் சரியான முடிவு எடுக்கும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சஸ்பெண்டு விவகாரத்தில் புதியக்கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் கிடையாது. அப்படி பேசுவது தவறானது என்றார்.












Click it and Unblock the Notifications