ஊட்டியில் 10ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீது விசாரணை
நீலகிரி: ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது புனித தெரசா உயர் நிலைப்பள்ளி. அந்த பள்ளியில் கடந்த சனிக்கிழமை சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. வகுப்புக்கு 10ம் வகுப்பு மாணவி ஒருவர் விளையாட்டு வீரர்கள் அணியும் உடையில் வந்திருக்கிறார். அப்போது அவரது ஜிப் திறந்திருக்கிறது என்று கூறி அதை மாட்டிவிடுவதாக பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான பாதிரியார் தெரிவித்தாராம்.
இதையடுத்து பாதிரியார் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவரிடம் தாளாளர் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications