ஓங்கி அறைந்ததில் மனைவி மரணம்: பெங்களூர் விஞ்ஞானி கைது

கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணியளவில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தர்மேஷின் சகோதரி அவரை தொலைபேசியில் அழைத்து மறுநாள் தான் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதற்கு மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
கடும் கோபம் அடைந்த தர்மேஷ் மகாலட்சுமியை ஓங்கி அறைந்துள்ளார். அறை வாங்கிய மாத்திரத்தில் மகாலட்சுமி சோபாவில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். பதறிப்போன தர்மேஷ், மகாலட்சுமியை எழுப்ப முயற்சித்துள்ளார். வாயோடு வாய் வைத்து தனது மூச்சு காற்றை கொடுத்து பார்த்துள்ளார். அதுவும் பயனளிக்கவில்லை என்ற உடன் அருகில் இருந்த செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளார்.
மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவெ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மடிவாளா போலீஸார் தர்மேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தர்மேஷ் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்ற போதிலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே கூற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மகாலட்சுமியின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கணவன் மனைவிக்கிடையே ஏற்கனவே ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று மகாலட்சுமியின் பெற்றோரிடம் போலீஸார் கேட்ட போது, அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளனார்.
தர்மேஷ் மகாலட்சுமி இருவரும் மும்பையில் கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மேஷ், பாபா அணு ஆய்வு மையத்தில் உதவி விஞ்ஞானியாக பணிபுரந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தர்மேஷ் மகாலட்சுமி ஜோடி பெங்களூருக்கு வந்தனர்.
காவல் நிலையத்தில் சம்பவம் பற்றி கூறிய தர்மேஷின் நண்பர் ஒருவர், இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், வீட்டில் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்னை என்று தர்மேஷ் ஒரு நாள் கூட கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications