ஓங்கி அறைந்ததில் மனைவி மரணம்: பெங்களூர் விஞ்ஞானி கைது

கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 10.30 மணியளவில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தர்மேஷின் சகோதரி அவரை தொலைபேசியில் அழைத்து மறுநாள் தான் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதற்கு மகாலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
கடும் கோபம் அடைந்த தர்மேஷ் மகாலட்சுமியை ஓங்கி அறைந்துள்ளார். அறை வாங்கிய மாத்திரத்தில் மகாலட்சுமி சோபாவில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். பதறிப்போன தர்மேஷ், மகாலட்சுமியை எழுப்ப முயற்சித்துள்ளார். வாயோடு வாய் வைத்து தனது மூச்சு காற்றை கொடுத்து பார்த்துள்ளார். அதுவும் பயனளிக்கவில்லை என்ற உடன் அருகில் இருந்த செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அவரை தூக்கிச் சென்றுள்ளார்.
மகாலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவெ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மடிவாளா போலீஸார் தர்மேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தர்மேஷ் தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்ற போதிலும் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே கூற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மகாலட்சுமியின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கணவன் மனைவிக்கிடையே ஏற்கனவே ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று மகாலட்சுமியின் பெற்றோரிடம் போலீஸார் கேட்ட போது, அப்படி எதும் இல்லை என்று கூறியுள்ளனார்.
தர்மேஷ் மகாலட்சுமி இருவரும் மும்பையில் கடந்த 2005ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தர்மேஷ், பாபா அணு ஆய்வு மையத்தில் உதவி விஞ்ஞானியாக பணிபுரந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தர்மேஷ் மகாலட்சுமி ஜோடி பெங்களூருக்கு வந்தனர்.
காவல் நிலையத்தில் சம்பவம் பற்றி கூறிய தர்மேஷின் நண்பர் ஒருவர், இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், வீட்டில் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்னை என்று தர்மேஷ் ஒரு நாள் கூட கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications