4 அணைகளின் நீரை திறந்து விட்டு வற்றிப் போக செய்யும் கர்நாடகம்-பிரதமருக்கு ஜெ புகார் கடிதம்!

அந்தக் கடிதத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிட்ட பிறகு கடந்த பிப்ரவரி 22ம் தேதி தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்கு முறைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்.
கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் உள்ள தண்ணீரை கோடை பாசனத்துக்கு திறந்து விட்டு வற்றிப் போக செய்கிறது.
பொதுவாக கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் ஏப்ரல் 3வது வாரத்தில் இருந்து மழை பெய்ய தொடங்கி அணைகளுக்கு நீர்வரத் தொடங்கி விடும். ஆனால், கடந்த காலங்களிலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை கர்நாடகம் மதித்ததில்லை.
கோடை பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தற்போதும் அதே நிலையை தொடர்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை மட்டுமே அணைகளில் தண்ணீர் திறக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது அங்குள்ள அணைகளில் இருந்து கோடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது.
எனவே, வரும் 2013 மே முதல் வாரம் முதல் கர்நாடகத்தின் நீர்ப் பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைக்கப் படவேண்டும். அதன்மூலம் 2013-2014ம் ஆண்டுக் காலத்தின் தமிழ்நாட்டின் காவிரி நதி நீர் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக அமையும். இதனால் 2013-2014ம் ஆண்டில் தமிழக நீர்ப்பாசனத்துக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும் என கருதுகிறேன்.
எனவே, இந்த சூழ்நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை உடனே அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தங்களின் சாதகமான முடிவை எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications