அமெரிக்காவில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிர் பிழைத்த 3 வயது குழந்தை!
நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாக வருகிறது. நியூயார்க் நகரில் விளையாட்டாக துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. ஆனால் அதிசயமாக சிறுவன் உயிர் பிழைத்திருக்கிறான்.
நியூயார்க் நகரில் 3 வயது சிறுவன் தமது அத்தை பயன்படுத்தியிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். குண்டுகள் நிரப்பப்பட்ட அந்தத் துப்பாக்கியின் விசை தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்தது. அப்படியே ரத்த வெள்ளத்தில் சிறுவன் மயங்கினான்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் சிறுவன். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அந்த சிறுவன் உயிர் பிழைத்தான். துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும் சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் அதிசயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications