சென்னையில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை-கைகள் துண்டாயின!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சூளைமேட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் அவரது இரு கைகளும் துண்டாகிவிட்டன.

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் இளங்கோ (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இளங்கோவின் சித்தியுடன் பார்த்தீபனுக்கு தவறான உறவு இருந்து வந்தது. இதை இளங்கோ கண்டித்தார். இந் நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பார்த்தீபனை இளங்கோ அரிவாளால் வெட்டினார். இதில் இளங்கோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதன்பிறகு ஜாமீனில் வெளியே வந்த இளங்கோ நேற்று முன்தினம் தான் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த பார்த்தீபனை பழிவாங்க அரிவாளுடன் சுற்றினார்.

இந்தத் தகவல் பார்த்தீபனுக்கு தெரியவந்தது. நேற்றிரவு டாஸ்மாக் கடையில் இளங்கோ மது அருந்திவிட்டு, பக்கத்தில் உள்ள கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பார்த்தீபனும் அரது நண்பர்களும் இளங்கோவிடம் இருந்த அரிவாளைப் பறித்து அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் இளங்கோவின் கைகள் துண்டாகி விழுந்தன. தலையிலும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இளங்கோ அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து கொலையாளிகள் பார்த்தீபன், கார்த்திக், வினோத், யுவராஜ் ஆகிய 4 பேரும் சூளைமேடு காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

போலீசாரிடம் பார்த்தீபன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை ஏற்கனவே இளங்கோ 6 மாதத்துக்கு முன்பு அரிவாளால் வெட்டினான். மீண்டும் என்னை வெட்ட அரிவாளுடன் சுற்றினான். இதனால் அவனை பழிக்கு பழி வாங்க அவன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி அவனை வெட்டி கொன்றோம் என்று கூறியுள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+