பேஸ்புக் மூலம் குழந்தைகளை விற்க முயன்ற தாய் கைது

Subscribe to Oneindia Tamil

Lady accussed for selling children through Facebook, arrested
ஒக்லஹோமா: அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்டி வான்ஹார்ன் என்னும் 22 வயது பெண் தனது குழந்தைகளை ஃபேஸ்புக் மூலம் விற்க முயற்சித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், தனது காதலனை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் குழந்தைகளை விற்க முயற்சித்ததாக கூறியுள்ளார்.

குழந்தைகளை விற்க இருப்பதாக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அறிவித்து வந்த வான்ஹார்ன், பத்து மாத பெண் குழந்தை மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் என்றும், இரண்டு வயது குழந்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டால் இரண்டு லட்சம் என்றும் அறிவித்தார்.

"30 நிமிடத்தில் வரக்கூடிய தூரத்தில் இருக்கும் சாலிசா என்னும் இடத்துக்கு வந்தால் குழந்தை மற்றும் அதனுடைய பொருட்கள் அனைத்தையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு நிரந்தரமாக பெற்றுக் கொள்ளலாம்" என மிஸ்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அர்கன்சாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் குழந்தைகளை விற்பது குறித்து பேசிக்கொண்டிருந்த போதுதான் மிஸ்டி கைது செய்யப்பட்டார். தற்போது அவருடைய இரண்டு குழந்தைகளும் சேவை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+