ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. ஆதிராஜாராம் உள்ளிட்ட 9 பேர் வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த ஆதி ராஜாராம் உள்ளிட்ட 9 பேர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர்.

ஜெயலலிதா தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். நீதிபதி பாலகிருஷ்ணா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ரூ.1.65 லட்சம் பிறந்த நாள் பரிசு அளித்தது தொடர்பாக, சேலம் மாநகராட்சி துணை மேயர் நடேசன், கட்சி உறுப்பினர்கள் கண்ணன், சேகர் ஆகியோரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, ஆதிராஜாராம், ரவிச்சந்திரன், நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம், கே.சேகர், கே.நஞ்சே கெüடா, எஸ்.சண்முகம், பாண்டுரங்கன், சுயம்பு பிரகாசம் ஆகியோர் நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு சந்தாத் தொகை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதுவரை 39 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+