ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. ஆதிராஜாராம் உள்ளிட்ட 9 பேர் வாக்குமூலம்

ஜெயலலிதா தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர். நீதிபதி பாலகிருஷ்ணா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு ரூ.1.65 லட்சம் பிறந்த நாள் பரிசு அளித்தது தொடர்பாக, சேலம் மாநகராட்சி துணை மேயர் நடேசன், கட்சி உறுப்பினர்கள் கண்ணன், சேகர் ஆகியோரிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் குறுக்கு விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, ஆதிராஜாராம், ரவிச்சந்திரன், நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணியம், கே.சேகர், கே.நஞ்சே கெüடா, எஸ்.சண்முகம், பாண்டுரங்கன், சுயம்பு பிரகாசம் ஆகியோர் நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு சந்தாத் தொகை செலுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதுவரை 39 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications