ஏழுமலையானுக்கு நீளமான முடி காணிக்கை கொடுத்தா ஐந்து லட்டு ஃப்ரீ!

இந்தியாவின் பணக்கார சாமியாக போற்றப்படுபவர் திருமலை ஏழுமலையான். இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த முடி ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கோவிலுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
சர்வதேச சந்தையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
அதாவது 31 அங்குலம் நீளம் கொண்ட முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 5 லட்டு இலவசமாக வழங்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.நீளமான முடியை பெண்கள்தான் வளர்ப்பார்கள் என்பதால் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் அவர்களுக்காக விசேஷ கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது.
நீளமான முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு அங்கேயே 5 லட்டுக்கான டோக்கள் வழங்கப்படும். ஏற்கனவே பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுடன் 2 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது நீளமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு ஏழு லட்டுகள் கிடைக்கும். இந்த புதிய திட்டம் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications