For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பலியான மதுரை ராணுவ வீரர்

By Siva
Google Oneindia Tamil News

Perumal
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பெமினா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை முகாம் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதையடுத்து பெமினா பள்ளி அருகே ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெருமாள்(31) என்பது தெரிய வந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள தும்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லிங்கம் என்பவரின் மகன் ஆவார். அவரது தாய் கிருஷ்ணவேணி. பெருமாளுக்கு ஞானபிரகாஷ், மகேஷ் என்ற 2 தம்பிகளும், ராஜராஜேஸ்வரி, ராஜேஸ்வரி என்ற 2 தங்கைகளும் உள்ளனர். பெருமாளுக்கு திருமணமாகவில்லை.

சிறு வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்ட பெருமாள் கடந்த 2010ம் ஆண்டு மத்திய ரிசர்வ் படையில் சேர்ந்தார். அவர் ஸ்ரீநகர் 73வது பட்டாலியனில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

English summary
5 jawans including TN based Perumal were killed in the terror attack in Srinagar on wednesday. Perumal(31) was unmarried and visited his parents 2 months ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X