Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது இலங்கை கடற்படை- தொடரும் அடாவடியால் மீனவர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

60 Tamil Nadu fishermen arrested by Lankan Navy
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து்க கொண்டிருந்த 60 பாம்பன் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் பாம்பன், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

இன்று காலை இந்த அக்கிரமச் செயல் நடந்துள்ளது. நேற்றுதான் 19 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று 60 பேரை பிடித்துப் போயுள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பிடித்துச் செல்லப்பட்டுள் 60 பேரையும் நெடுந்தீவு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று இலங்கைப் படையினர் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாம்பன் மீவர் சங்கத் தலைவர் அருளானந்தம் தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர்கள் அனைவரும் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கைக் கடற்படையினர் அனைவரையும் சுற்றி வளைத்து சிறை பிடித்தனர். மீனவர்களை சுற்றி வளைத்தபோது சிங்களப் படையினர் தமிழக மீனவர்களை கயிறுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+