கை கோர்க்கப் போகிறது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும்.. சாதனை படைப்பாரா சுந்தர் பிச்சை?

இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கப் போகிறது. அதாவது மொபைல் போன்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆண்ட்ராய்டுடன் கூகுள் குரோமும் இணைந்து இரட்டிப்பு பலனைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
2004ம் ஆண்டு முதலே ஆண்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கவனித்து வந்தவர் ரூபின். ஆண்ட்ராய்ட் பொறுப்புக்கு வரும் சுந்தர் பிச்சை, குரோமையும் தொடர்ந்து பார்த்து வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பர்சனர் கம்ப்யூட்டர்களும், மொபைல் போன்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பாதையில்தான் பயணித்து வருகின்றன. இதற்குக் காரணம் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள சில தொழில்நுட்பப் பிரச்சினைகள்தான். ஆனால் தற்போது ஆண்ட்ராய்டும், கூகுள் குரோமும் கை கோர்த்துள்ளதால் இந்த வேறுபாடு நீங்கி இரண்டும் ஒரே பாதையில் பயணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
2011ம் ஆண்டில் கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்மித், ஒரு நாள் ஆண்ட்ராய்டும், குரோமும் ஒன்று கலக்கும் என்று கூறியிருந்தார். தற்போதுதான் அது நிறைவேறும் வாய்ப்பு வந்துள்ளது. தற்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்ட் பின்னணியில்தான் இயங்குகின்றன. அதேசமயம், கூகுளின் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டம் பிரபலமாக இருந்தபோதிலும், மொபைல் போன்களில் அது வெற்றி பெறாமலேயே இருக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தற்போது பெரும் தீர்வு காணும் வாய்ப்பு சுந்தர் பிச்சை ரூபத்தில் வந்துள்ளது. ஒரு கையில் ஆண்ட்ராய்ட் இன்னொரு கையில் குரோம் என்று தாங்கிப் பிடிக்கப் போகும் அவர் இரண்டையும் ஒரே கைக்குள் அடக்கி மொபைல் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications