53 மீனவர்களை மீட்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 53 மீனவர்களையும் மீட்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இன்று மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் இலங்கைப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ள 53 மீனவர்களை மீட்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது மத்திய அரசு தங்களது விஷயத்தில் தொடர்ந்து பாராமுகமாக இருந்து வருவதற்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 53 மீனவர்களையும் மீட்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் மார்ச் 22ம் தேதிக்குள் தங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications