வீட்டிற்கு வானம் தோண்டிய போது வெளியே வந்த அம்மன்!
அம்பை: அம்பை அருகே வீட்டுக்கு வானம் தோண்டிய போது அம்மன் சிலை கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமம் சேனையர் தெருவை சேர்ந்தவர் சூடாமணி. இவர் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் நுட்ப பணியாளராக உள்ளார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்தார். இதன் பொருட்டு நிலத்தை தோண்டியபோது சுமார் 2 அடி உயரம் உள்ள பீடத்துடன் கூடிய அம்மன் சிலை கிடைத்தது.
இதுகுறித்து வருவாய் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வருவாய்த்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.
பின்னர் வருவாய் ஆய்வாளர் அலுலவகத்துக்கு சிலை எடுத்து செல்லப்பட்டது. தொல்லியல் துறையினர் ஆய்வு செய்த பின் தான் அது ஐம்பொன் சிலையா, அல்லது வெண்கல சிலையா என்பது தெரிய வரும் என்று வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications