Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாட்ஜுக்கு வந்து பொருட்களை எடுத்துக் கொண்டு பில்லையும் கட்டி விட்டு வெளியேறிய போப்பாண்டவர்!

Subscribe to Oneindia Tamil

Pope Francis
வாடிகன் சிட்டி: புதிய போப்பாண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ், தனது ஹோட்டல் பில் பாக்கியை கட்டுவதற்காக ரோம் நகருக்கு வந்தார். இந்த ஹோட்டலில்தான் இதுவரை அவர் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை அவர் தனது டிரைவரை அழைத்து ஹோட்டலுக்குப் போக வேண்டும் என்று கூறி காரை எடுக்கப் பணித்தார். பின்னர் அங்கு சென்ற அவர் தனது அறையில் இருந்த தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து எடுத்துக் கொண்டு கீழே வந்தார்.

பிறகு கீழே ரிசப்ஷனுக்கு வந்த அவர் அனைவரிடமும் நலம் விசாரித்தார். ஆசி வழங்கினார். பின்னர் ஹோட்டலில் இத்தனை நாட்கள் தங்கியிருந்ததற்கான வாடகைக் கட்டணம் எவ்வளவு என்று அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்டார்.

அதைக் கேட்டு அங்கிருந்தோர் வியப்படைந்தனர். தொகையை வலியுறுத்திக் கேட்ட அவர் பின்னர் அதை செலுத்தி விட்டே வெளியேறினார்.

அனைவருக்கும் தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி விட்டுப் போனாராம் புதிய போப்.

போப்பாண்டவரின் இந்த செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+