நாமக்கல்லில் அதிரடி- பிளஸ் 2 தேர்வு கண்காணிப்பாளர்கள் 1300 பேர் அதிரடி இட மாற்றம்
நாமக்கல்: நாமக்கல்லில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது அம்பலமானதையடுத்து 1300 கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 11-ந்தேதி நடந்த இயற்பியல் தேர்வில் நாமக்கல் அருகே ஒரு தனியார் பள்ளியில் ஒரு மதிப்பெண் கேள்விக்கான விடையை மாணவர்களுக்கு அட்டையில் எழுதி காட்டி முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய முக்கிய தேர்வுகள் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இத் தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெற கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். இதையடுத்து 3-வது முறையாக தலைமை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் வெவ்வேறு தேர்வு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தனியார் பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட 30 முதன்மை கண்காணிப்பாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு வேறு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டம் முழுவதும் அறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த 1300 ஆசிரிய, ஆசிரியைகளை வேறு மையங்களுக்கு மாற்றி நேற்று மாலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications