அறவழியில் போராடும் மாணவர்களை தாக்குவதா? காவல்துறைக்கு வைகோ கண்டனம்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத விதத்தில், தமிழக மாணவர்கள், ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு, அறவழியில் போராடி வருகின்றார்கள். கடந்த 11 நாட்களாக தமிழகத்தில் இலட்சக்கணக்கான மாணவர்கள் துளியும் வன்முறைக்கு இடம் இன்றி, அறவழியில், பசியோடும், பட்டினியோடும் சிங்களக் கொலைகார அரசை எதிர்த்தும் அதற்கு உதவும் இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், தமிழ் ஈழ சுதந்திர விடியலுக்கு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்கவும் போராடி வருகின்றார்கள்.
இத்தகைய ஒரு அமைதி வழிப் போராட்டம், பிரளயத்தின் எழுச்சியோடு நடக்கிறது.
மாணவர்கள் மீது தடியடி
மதுரையில், ஆயிரக் கணக்கான மாணவர்கள் பேரணியாக மூலக்கரை என்ற இடத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்துகொண்டு இருந்தனர். அப்பொழுது காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு என்பவர், மதுரை சட்டக்கல்லூரி மாணவர் அய்யாதுரையைப் பார்த்து, ‘நீதான் போராட்டங்களுக்கு எல்லாம் காரணமாக இருக்கிறாய், உன்னை அடித்தே கொன்று விடுவேன்' என்று கடுமையாக மிரட்டி உள்ளார்.
பேரணியாக வந்த மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையம் அருகில், அமைதியாக அமர்ந்தபோது, துணை ஆணையர் திருநாவுக்கரசு காவலர்களோடு வந்து, மாணவர் அய்யாத்துரையை அடித்து இழுத்துக்கொண்டு சென்று, முகத்திலும் தலையிலும் தாக்கி உள்ளார். இரத்தக் காயத்தோடு கீழே விழுந்த அய்யாத்துரையின் நெஞ்சில் ஏறி காவல்துறையினர் மிதித்தனர். அய்யாதுரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
காட்டுமிராண்டித்தனம் வேண்டாம்
காட்டுமிராண்டித் தனமான இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசையும், தாக்குதல் நடத்திய காவல்துறையினரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1965 இல் ஜனவரி 25 ஆம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதின் விளைவாகத்தான் புரட்சி வெடித்தது; இராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்பது நினைவுபடுத்தும் வரலாறு ஆகும்.
மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்த காவல்துறைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, விபரீத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications