டெல்லியில் +1 படிக்கும் மாணவியை கற்பழித்த சக மாணவர்கள் 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உடன் படிக்கும் மாணவியை கற்பழித்த பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி பாவனா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் திடுக்கிடும் செயலைச் செய்துள்ளனர். அந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் 4 மாணவர்கள் 16 வயதாகும் சக மாணவியை கற்பழித்துள்ளனர். கடந்த 13ம் தேதி அந்த 4 பேரில் ஒருவரின் வீட்டுக்கு அந்த மாணவி சென்றுள்ளார். அங்கு வைத்து ஒரு மாணவர் அந்த மாணவியை கற்பழிக்க அதை மற்றவர்கள் தடுக்காமல் சும்மா இருந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 மாணவர்களையும் கைது செய்தனர். கைதான அனைவரும் 16 முதல் 17 வயதுடைய மைனர் என்பதால் அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

ஒரு மாணவர் அந்த மாணவியை கற்பழிக்க மற்ற 3 பேரும் அங்கிருந்துள்ளனர். ஆனால் குற்றம் நடந்த இடத்தில் இருந்ததால் அந்த 3 பேர் மீதும், கற்பழித்தவர் மீது போடப்பட்டுள்ள அதே பிரிவுகளில் தான் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றார்.

அந்த மாணவர்களும், மாணவியும் ஒரே பகுதியில் வசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+