முதிர்ச்சியை அடிப்படையாக வைத்து மைனர் வயதை நிர்ணயிக்க வேண்டும்- சாமி

இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். பின்னர் நீதிபதிகள் முன்பு அவர் வாதிடுகையில், ஜூவினைல் அதாவது மைனர் என்பதற்கான பதத்திற்கான விளக்கம் தற்போதைய சட்டத்தில் தெளிவாக இல்லை. தற்போதைய காலகட்டத்தி்ல் அதை மேலும் தெளிவாக்க வேண்டியது அவசியம். அதற்கான சூழ்நிலை தற்போது எழுந்துள்ளது.
18 வயதுக்குட்பட்டோர் மைனர் என்று பொத்தாம் பொதுவாக கூறுவது சரியாக இருக்காது. மாறாக, சம்பந்தப்பட்ட நபர், குற்றம் இழைத்தபோது இருந்த அவருடைய மன முதிர்ச்சி, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றையும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் அவர் மைனரா அல்லது மேஜரா என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், மனுவின் நகலை மத்திய அரசிடம் சமர்ப்பிக்குமாறு சாமிக்கு உத்தரவிட்டனர்.
சாமி மேலும் வாதிடுகையில், தற்போதைய சிறார் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டமானது, ஐ.நா. சிறார் உரிமை மாநாட்டு தீர்மானத்திற்கு எதிரானதாக இருக்கிறு என்றார்.












Click it and Unblock the Notifications