சென்னை ஏர்போர்ட்டில் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் கைது
சென்னை: சென்னை வந்த மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு மதிமுகவினர் கறுப்புக் கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று ராணுவ அமைச்சர் ஏ.கே அந்தோணி கூறியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவேன் என்று கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து சமாதானம் பேச அவர் சென்னை வந்தார். அப்போது மதிமுக சார்பில் கறுப்புக் கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் காஞ்சி, பாலவாக்கம் சோமு, தென் சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், வடசென்னை சு.ஜீவன், தேர்தல் பணிச் செயலாளர் ந.மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications