சு.சாமி ஏன் இப்போ தமிழ்நாட்டுப் பக்கம் வர்றதில்ல..!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானத்தில் இந்தியா வலுவான திருத்தங்களை மேற்கொள்ள திமுக வலியுறுத்தியது. ஆனால் திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த திமுக, ஏற்கெனவே அறிவித்தபடி மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகியுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, திமுகவின் முடிவு ஆச்சரியப்படக் கூடியது அல்ல.. இது நல்ல நாடகம். அவர்கள் ஜெயலலிதாவைக் கண்டு பயப்படுகின்றவர்கள். அடுத்த ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ மீண்டும் மத்திய அரசில் திமுக இடம்பெறக் கூடும். மதவாதக் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் அரசில் திமுக சேரும். இதுதான் நடைபெறப் போகிறது என்றார்.
சாமி, இலங்கை விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்துக்கிட்டு இருக்கே.. தெரியுமா?. அப்படியே, இப்போ தமிழ்நாட்டுப் பக்கம் ஒரு எட்டு வரலாமே!












Click it and Unblock the Notifications