ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்க ஜெனிவா சென்றார் சீமான்… மார்ச் 22ல் உரை

Subscribe to Oneindia Tamil

Seeman
ஜெனிவா: ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானுக்கு சுவிஸ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான் சுவிஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி பேசுவதற்காக சென்றுள்ள சீமான் அங்கிருந்து ஜெனீவா சென்றார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் தடா சந்திரசேகரும் சென்றுள்ளார்.

சீமானுக்கு ஜெனிவா விமான நிலையத்தில் திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான சுவிஸ் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் மலர்ச் செண்டும் தமிழ் ஈழ தேசியகொடி வழங்கி வரவேற்றனர். 22-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜெனீவா நகரில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+