குளித்தலையில் பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக தீவிர போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: குளித்தலையில் பல்வேறு அமைப்புகள் இலங்கைக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தின.

கரூர் மாவட்டம் குளித்தலையில் மத்திய அரசை கண்டித்தும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரியும் தமிழ் வழக்கறிஞர் பேரவையின் உண்ணாவிரதம் போராட்டம் காவல் நிலையம் முன்பாக நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தமிழ் வழக்கறிஞர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், காமராஜ், மது, செல்வகாந்தி மற்றும் வழக்கறிஞர்கள் செந்தில்குமார், நீலமேகம், பரமசிவம், மகுடேஸ்வரன், ராஜீ, மருதூர் திருநாவுக்கரசு, அஜீஸ், தமிழ்செல்வன், பாஸ்கர், சிவகாமசுந்தரி, முனைவர் கடவூர் மணிமாறன், திருச்சி வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் மனு எழுத்தர் கூட்டமைப்பு சார்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு நடைபெற்றது. அதிமுக சிறுபான்மை பிரிவு எஸ்.ஏ.காதர் மொய்தீன் முன்னிலையில் நடந்த போராட்டத்தில் பொன்னரசு, பானுமதி, தியாகராஜன், மணி, எழில் ஜெயலெட்சுமி, நாகராஜன், பானு, ராமசாமி, நவாப்ஜான், மருதை முத்து, சிவபெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் குளித்தலை நகரம், ஒன்றியம், தோகைமலை ஒன்றியம் சார்பாக தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இரா. சக்திவேல் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். குளித்தலை பேருந்து நிலையத்தில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+