ஈழத் தமிழருக்காக சென்னையில் தீக்குளித்த இளைஞர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னையில் நேற்று இரவு தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை புறநகர் பகுதியான நெற்குன்றத்தில் நேற்று தமிழ் அமைப்புகளின் சார்பில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட விக்ரம் என்ற இளைஞர் திடீரென தம் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பலத்த தீக்காயங்களுடன் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்களின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+