பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க மக்கள் தொகை பெருக்கமே காரணம்: மமதா பானர்ஜி கண்டுபிடிப்பு

மேற்கு வங்க சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அவர், மக்கள் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. பி.சி. ராய் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் தொகையா இப்போது இருக்கும்? சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுகிறீர்கள்... பலாத்கார சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக சொல்கிறீர்கள்..
மக்கள் தொகை அதிகரிக்கிறது.. வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.. உள்கட்டமைப்பு அதிகரிக்கிறது..வணிக வளாகங்கள் பெருகுகின்றன.. மல்டிபிளக்ஸ் வளாகங்கள் வளர்கின்றன. இளைஞர்கள் நவீனமாகி வருகின்றனர். இதை எல்லாம் வரவேற்க மாட்டீர்களா?
முன்பை விட இப்போது சமூகப் பொறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் பலாத்கார சம்பவங்கள் வழக்காகப் பதிவாவது இல்லை. இப்போது வழக்குகளாகப் பதிவு செய்யக் கூடிய ஒரு விழிப்புணர்வு இருக்கிறது.
கொல்கத்தாவில் 2007-44, 2008-35, 2009-ல் 42, 2010-ல் 32, 2011-ல் 38, 2012-ல் 45 பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மாநிலம் முழுவதும் 2005-ல் 1673, 2006-ல் 1693,2007-ல் 2,062, 2008-ல் 2,228 , 2009-ல்2,292, 2010-ல் 2,279. 2011-ல் 1,650. 2012-ல் 1,836 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
2011-ம் ஆண்டு டெல்லியில் 453, மும்பையில் 221, பெங்களூரில் 97, சென்னையில் 76 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. டெல்லியில் கடந்த ஆண்டு 2012-ல் மட்டும் 621 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications