சமூக வலைத்தளத்தின் சுதந்திரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: குர்ஷித்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: சமூக வலைதளங்கள் வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்,ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெஅரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பத்திரிகை ஒன்று 'சுதந்திரமும் சமத்துவமும்' என்ற தலைப்பில் விவாதம் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் சமூக வலைதளங்கள் குறித்து கூறியதாவது, 'நாம் அனைவரும் சமம் என்பதால் இந்த சமூக வலைதளங்கள் சக்தி மிக்கதாக இருக்கிறது. இது சமூக வலைதளங்கள் வழங்கும் சமத்துவம். அது வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள். இந்த சுதந்திரமும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.

சமத்துவத்தை யாரும் ஒழுங்கு படுத்துவதில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் சுதந்திரம் ஒழுங்கு படுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை படித்துப்பாருங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால், அனைத்து வகை சுதந்திரங்களும் நியாயமான கட்டுபாடுகளுக்கு உட்பட்டதே என்று கூறும் அரசியலமைப்பை மதித்து நடக்க வேண்டும்', இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், இந்த விவாதத்தில் கூட்டுறவு விவகாரத்துறை மந்திரி சச்சின் பைலட், பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+