சமூக வலைத்தளத்தின் சுதந்திரத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: குர்ஷித்
கொல்கத்தா: சமூக வலைதளங்கள் வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்,ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும் என மந்திரி சல்மான் குர்ஷித் கருத்து தெஅரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பத்திரிகை ஒன்று 'சுதந்திரமும் சமத்துவமும்' என்ற தலைப்பில் விவாதம் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் சமூக வலைதளங்கள் குறித்து கூறியதாவது, 'நாம் அனைவரும் சமம் என்பதால் இந்த சமூக வலைதளங்கள் சக்தி மிக்கதாக இருக்கிறது. இது சமூக வலைதளங்கள் வழங்கும் சமத்துவம். அது வழங்கும் சுதந்திரத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள். இந்த சுதந்திரமும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டிய ஒன்றே. ஏனென்றால் அனைத்து வகையான சுதந்திரங்களும் ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்.
சமத்துவத்தை யாரும் ஒழுங்கு படுத்துவதில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் சுதந்திரம் ஒழுங்கு படுத்தப்படுகிறது. இந்திய அரசியலமைப்பை படித்துப்பாருங்கள். நீங்கள் உண்மையான இந்தியனாக இருந்தால், அனைத்து வகை சுதந்திரங்களும் நியாயமான கட்டுபாடுகளுக்கு உட்பட்டதே என்று கூறும் அரசியலமைப்பை மதித்து நடக்க வேண்டும்', இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த விவாதத்தில் கூட்டுறவு விவகாரத்துறை மந்திரி சச்சின் பைலட், பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications