தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக லண்டனில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிவு!
லண்டன்: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் 3 பேர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் லண்டனில் தினேஷ், திராவிடன், தமிழ் தினேஷ் ஆகியோர் சொட்டு நீரும் அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 18ம் தேதி முதல் இவர்களது போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தின் முடிவாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், இலங்கை இன அழிப்பு தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும், தமிழர் தாயகத்தின் மீது இலங்கை அரசால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பொறிமுறை ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்,
இலங்கை படையினரால் கைது செய்யப்பட்டு காணமல் போன போராளிகள் மற்றும் பொதுமக்களின் விவரங்களை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், கால வரையறை இல்லாமல் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு, பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள், அரச படைகளின் அத்துமீறிய நில அபகரிப்புகள், வழிபாட்டுத் தளங்கள் அழிக்கப்படுவது போன்றவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications