ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டமாக்குவதை எதிர்ப்பு: பிரான்சில் மாபெரும் பேரணி

பிரான்சில் ஓரினச்சேர்க்கையை ஏற்றுக்கொள்வது மற்றும் சட்டமாக்குவதற்கான மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. அது, அடுத்த மாதம் பிரான்ஸ் செனட் சபையில் ஒப்பதலுக்காக கொண்டுவரப்படவுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்கருத்து கணிப்புகளும் ஓரினச்சேர்க்கையை சட்டமாக்குவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக சொல்கிறது.
பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹாலந்தேயுனுடைய சமுதாய கட்சியும், அவரது ஆதரவு கட்சிகளும் இருசபையிலும் செல்வாக்குடன் இருப்பதால் அந்த ஓரினச்சேர்க்கை அங்கீகார மசோதா வெற்றிபெறும் நிலை உள்ளது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்கள் நேற்று பாரிஸ் நகரில் மாபெரும் பேரணி நடத்தினர். வலது சாரி அமைப்புகளின் ஆதரவுடன், அவர்கள் அதிபர் மாளிகை நோக்கி செல்ல முயன்றனர்.
அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.












Click it and Unblock the Notifications