கோடை கால சீசன்: விமான டிக்கெட் விலை 3 மடங்கு உயர்கிறது?

Subscribe to Oneindia Tamil

Summer vacation: Airline tickets to cost dearly
சென்னை: கோடை விடுமுறை துவங்குவதையடுத்து விமான பயண டிக்கெட் விலை 3 மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது.

கோடை விடுமுறை வந்துவிட்டால் மக்கள் உறவினர்கள் வீடுகள், சுற்றுலாத் தலங்களுக்கு கிளம்பிவிடுவார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். மேலும் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் கோடை விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகரிக்கும்.

கோடை விடுமுறையில் லாபம் பார்க்க விமான நிறுவனங்கள் பயண டிக்கெட் விலையை உயர்த்துவதுண்டு. இந்த ஆண்டு கோடை விடுமுறையையொட்டி விமான பயண டிக்கெட் விலை 3 மடங்கு உயரும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி டிக்கெட் விலையை நிர்ணயிப்பதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் நடுத்தர மக்களும் பண பிரச்சனையின்றி விமானத்தில் பயணம் செய்யும் வகையில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+