ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் 'யாரோ' லஞ்சம் வாங்கிட்டாங்கய்யா...: ஏ.கே.ஆண்டனி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இத்தாலி நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் யாரோ பணம் வாங்கியுள்ளனர் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் யாரோ லஞ்சம் வாங்கியுள்ளனர். அவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்றார்.












Click it and Unblock the Notifications