ஏப்ரல் 1ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகம் திறப்பு: நிர்வாகம் அறிவிப்பு
சிதம்பரம்: மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் 1ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருப்பது, பேரணி நடத்துவது, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்று போராடி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும் அடக்கம்.
இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் 1ம் தேதி திறக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல் ஆகிய புலங்கள், இசைத்துறை மற்றும் பொறியியல் புல மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், வேளாண் புல மாணவ, மாணவியர்களுக்கு வரும் மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications