ப்ளஸ் டூ தேர்வு எழுத வந்த பாம்பு– பீதியில் ஓடிய மாணவிகள்
உடன்குடி: உடன்குடியில் உள்ள பள்ளியில் தேர்வு அறைக்குள் பாம்பு புகுந்ததால் தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பன்டாரசெட்டி விளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்டூ தேர்வு நடந்து கொண்டிருந்தது. 3 அறைகளில் 56 மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது திடீரென தேர்வு நடந்து கொண்டிருந்த ஒரு அறைக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.
இதை பார்த்து அஞ்சிய மாணவிகள் தேர்வு எழுதி கொண்டிருந்ததை விட்டுவிட்டு பீதியில் வெளியே ஓடிவந்தனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களும் அந்த அறையை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் லீலா சந்திராபாய் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் பாம்பு அங்கிருந்த ஆய்வு கூடத்துக்குள் புகுந்து கொண்டது. இதனால் மாணவிகளும், ஆசிரியர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் மாணவிகளை தேர்வு எழுத தலைமை ஆசிரியை அழைத்தார். அச்சத்தில் இருந்த மாணவிகள் பாமபு வந்த தேர்வு அறைக்குள் தேர்வு எழுத்த மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பக்கத்து அறையை தேர்வு அறையாக மாற்றி அதில் மாணவிகள் பதற்றத்துடன் தேர்வு எழுதினர். பரிட்சை ஹாலுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் உடன்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications