கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் பெங்களூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என கருதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று (செவ்வாய் கிழமை) மதியம் ,கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று பெங்களூரு முனிசிபல் ஆபிஸ் அருகே கிடப்பதாக, அவ்வழியே பயணம் செய்தோர் போலிசுக்கு போன் செய்தனர். அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு அகற்றும் வீரர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மணல் மூட்டைகளால் தடுப்பு போடப்பட்டு, தக்க பாதுகாப்புடன் சூட்கேஸ் திறக்கப்பட்டது. உள்ளே சில ஆவணங்களும், காசோலைப் புத்தகமும் இருந்தது. அதில் இருந்த போன் நம்பருக்கு போலிசார் போன் செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு, அப்பெட்டி ராஜேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. தன் ஊழியர் தவற விட்டிருக்கலாம் என ராஜேஷ் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, பதற்றம் நீங்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+