'ஜா' அணியும், 'ஜெ' அணியும் சட்டசபையில் போட்ட 'மைக் அடிதடி' மறந்துவிட்டதா?- கருணாநிதி

தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை பேரவைத் தலைவர் ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சட்டப்பேரவை கூட்டம் 8-2-2013ல் நடைபெற்றபோது, தேமுதிக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் அந்தக் கட்சி தலைமைக்குக் கட்டுப்படாமல் வெளியேறியதாகக் கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் (தமிழழகன்) பேரவையில் பேசும்போது, தான் கட்சியிலிருந்து வெளியேறிய காரணத்தால், ஆட்சியினர் தன் தொகுதிக்கு நன்மைகளைச் செய்கிறார்கள் என்றும், மற்ற தேமுதிக உறுப்பினர்களும் தன்னைப்போல் முடிவு எடுத்தால், அவர்களும் பயன் பெறலாம் என்றும் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். அவரது அந்த பேச்சுக்கு தேமுதிக உறுப்பினர்கள் அவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு சாராருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்குள் நடைபெற்ற விவகாரம் இது.
இதில் தேமுதிக சார்பில் வெற்றி பெற்று அக்கட்சியின் கட்டுப்பாட்டுக்கு புறம்பாகச் செயல்படும் உறுப்பினர் தாக்கப்பட்டதாகக் கூறி, தேமுதிகவில் தொடர்ந்து உறுதியாக இருக்கின்ற 6 பேர் மீது பிரச்சனை எழுப்பப்பட்டு, உரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. உரிமைக் குழுவும் ஒரு மாதத்திற்குள் இந்தப் பிரச்சனை பற்றி ஆய்வு செய்து தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. அதன்படி, அந்த 6 உறுப்பினர்களும் ஓராண்டு காலத்திற்கு பேரவைக்கு வர முடியாத அளவிற்குத் தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஓராண்டு காலத்திற்கு அவர்களுக்கு ஊதியமும் கிடையாது. இந்த நடவடிக்கையைக் கண்டித்து, திமுக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications