மாணவ-மாணவியர்கள் போராட்டம்....

Subscribe to Oneindia Tamil

மாணவ-மாணவியர்கள் போராட்டம்....

இந்தத் திருத்தங்களை எல்லாம் 19.3.2013 அன்று இறுதி வரைவு தீர்மானம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை எடுத்து, மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நாடாக இந்திய நாடு விளங்க வழிவகை செய்ய வேண்டும் என்று நான் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டேன். இது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா இந்த ஆண்டு கொண்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், இதையெல்லாம் திமுக அங்கம் வகித்த மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற, மனிதநேயமற்ற செயல்களை, போர்க்குற்றங்களை, இனப் படுகொலையைக் கண்டித்து, கல்லூரி மாணவ-மாணவியர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 100க்கும் அதிகமான கல்லூரிகளில் மாணவ- மாணவியர் வகுப்புகளை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், மாணவ-மாணவியர் 210 இடங்களில் ஆர்ப்பாட்டம், 110 இடங்களில் ஊர்வலம், 68 இடங்களில் சாலை மறியல், 31 இடங்களில் ரயில் மறியல், 24 இடங்களில் உருவப் பொம்மையை எரித்தல் ஆகிய போராட்டங்களிலும் ஈடுபட்டனர். எனது தலைமையிலான அரசால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமரை வலியுறுத்தி நான் எழுதியுள்ள கடிதங்கள் மற்றும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக எனது தலைமையிலான அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாகத்தான் மாணவ-மாணவியரின் போராட்டம் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதுதான் இந்தப் போராட்டம். அரசியலுக்கு சிறிதும் இடமளிக்காமல் இலங்கை தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, உன்னதமான குறிக்கோளுக்காக அறவழியில் நடத்தப்படும் இந்தப் போராட்டம் இலங்கைத் தமிழர் நலனுக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு. இவ்வளவு உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழ்நிலையிலும், இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தி வருகிறது. போரினால் இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களுடைய சொந்த நாட்டிலேயே இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வரும் அவல நிலைமை நீடிக்கிறது. இது மட்டுமல்லாமல், தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்களை இலங்கை அரசு குடியமர்த்தி வருகிறது.

இலங்கையில் இனவெறி தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது...

தமிழர் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்படுகின்றன. மொத்தத்தில் ஒரு இனவெறி இலங்கையில் தாண்டவமாடிக் கொண்டு இருக்கிறது. இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய மத்திய அரசு, தமிழர்களின் உணர்வுகளுக்கு, தமிழக அரசின் கோரிக்கைகளுக்கு சற்றும் மதிப்பளிக்காமல் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ- மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக்கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+