அவர்கள் சமூக விரோதிகள், மாணவர்கள் அல்ல.. ஞானதேசிகன் சர்ச்சைப் பேச்சு
சென்னை: திருச்சியில் காங்கிரஸாருடன் மோதியவர்கள் மாணவர்கள் இல்லை, சமூக விரோதிகள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை ஈழத்திற்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும், மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தத் தகராறு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களைச் சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுகின்றன. மாணவர்கள் என்ற போர்வையில் சமூக விரோத சக்திகள் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தின. மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர்.
ஏற்கனவே காங்கிரஸ் மீது கடும் காட்டத்தில் தமிழக மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸாரால் தாக்கப்பட்ட காயமடைந்த மாணவர்களை சமூக விரோதிகள் என தேசிகன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications