ஏர் இந்தியா உள்நாட்டு சேவையில் இனி இலவச உணவு கிடையாது ஸ்நாக்ஸ் மட்டுமே

ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் செலவுகளைக் குறைத்து வருவாயை அதிகரிக்க ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசு குழு ஒன்றை நியமித்தது. அந்த குழு தனது அறிக்கையை விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜீத் சிங்கிடம் நேற்று அளித்தது.
அந்த குழுவின் சில பரிந்துரைகள் வருமாறு,
இருக்கையை மேம்படுத்தி கூடுதல் தொகையை வசூலிக்கலாம். அதிகமாக லக்கேஜ் கொண்டு வரும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும். உள்நாட்டு சேவையின்போது எகனாமி வகுப்பில் இலவசமாக உணவு வழங்குவதற்கு பதில் நொறுக்குத் தீனி வழங்கலாம். உணவு வேண்டும் என்கிறவர்கள் அதற்கான பணத்தை அளித்துவிட்டு வாங்கி சாப்பிடட்டும். எகனாமி வகுப்பில் கால் வைக்க அதிக இடம் இருக்கும் சீட்களை கேட்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தட்டும் என்பது உள்ளிட்ட 46 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இந்த பரிந்துரைகளை ஏற்று செயல்பட்டால் ஏர் இந்தியாவுக்கு ஆண்டுக்கு ரூ.3,240 கோடி மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications