பாஜகவில் சண்டைக் கோழிகளே இப்போது இல்லையே.....: ஜெகதீஷ் ஷெட்டர் பெருமை
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் அருகே நெலமங்களாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், பாரதிய ஜனதாவில் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். இப்போது பாரதிய ஜனதா கட்சி சண்டை இல்லாத கட்சியாக மாறி விட்டது. ஒழுங்கு மிக்க கட்சியாக உள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்த வளர்ச்சி பணிகளை தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துக் கூறுவோம். அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்து பாரதிய ஜனதாவை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர செய்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
பாரதிய ஜனதா அரசு ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டை முதல் முறையாக அரசு தாக்கல் செய்தது. விவசாயிகள் மேம்பாட்டுக்கு என்று ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த முதல் முதல்வர் என்ற பெருமையை நான் பெற்று உள்ளேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications